அவளுக்கான தேடலில் என்னையொரு
காரணியாக்கி சித்திரவதை செய்கிறாள்
மின்சார கம்பியில் விழுந்த பறவை போல
வீதியெங்கும் புணர்ந்துகிடக்கும்
காரணியாக்கி சித்திரவதை செய்கிறாள்
மின்சார கம்பியில் விழுந்த பறவை போல
வீதியெங்கும் புணர்ந்துகிடக்கும்
பிம்பங்களை காணச்செய்து
இமை முடியில் கல் கட்டுகிறாள்
அவசரமென விரையச்சொல்லி
விழும் வியர்வை வாசனை பிடிக்கிறாள்
வெட்டியான் பிடியிலிருந்து தப்பிய நாய் போல
ஒரு ஓலத்தை கொண்டாடச்சொல்லி
வெடித்து சிரிப்பவள்-பின்பு
தானாய் கதறியழ துவங்குகிறாள்
தன்னை புணர்ந்தவர்களை அடையாளம் சொல்லி
கொலை செய்ய வேண்டுகிறாள்-அவளுக்கு
பார்வையில்லாதது எத்தனை செளகரியம்!
இமை முடியில் கல் கட்டுகிறாள்
அவசரமென விரையச்சொல்லி
விழும் வியர்வை வாசனை பிடிக்கிறாள்
வெட்டியான் பிடியிலிருந்து தப்பிய நாய் போல
ஒரு ஓலத்தை கொண்டாடச்சொல்லி
வெடித்து சிரிப்பவள்-பின்பு
தானாய் கதறியழ துவங்குகிறாள்
தன்னை புணர்ந்தவர்களை அடையாளம் சொல்லி
கொலை செய்ய வேண்டுகிறாள்-அவளுக்கு
பார்வையில்லாதது எத்தனை செளகரியம்!
0 comments
Post a Comment