Pin It

Widgets


அவளுக்கான தேடலில் என்னையொரு
காரணியாக்கி சித்திரவதை செய்கிறாள்
மின்சார கம்பியில் விழுந்த பறவை போல

வீதியெங்கும் புணர்ந்துகிடக்கும்
பிம்பங்களை காணச்செய்து
இமை முடியில் கல் கட்டுகிறாள்

அவசரமென விரையச்சொல்லி
விழும் வியர்வை வாசனை பிடிக்கிறாள்
வெட்டியான் பிடியிலிருந்து தப்பிய நாய் போல

ஒரு ஓலத்தை கொண்டாடச்சொல்லி
வெடித்து சிரிப்பவள்-பின்பு
தானாய் கதறியழ துவங்குகிறாள்

தன்னை புணர்ந்தவர்களை அடையாளம் சொல்லி
கொலை செய்ய வேண்டுகிறாள்-அவளுக்கு
பார்வையில்லாதது எத்தனை செளகரியம்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets