தாடி குத்துகிறது என்று முத்தமிடாது
திமிறிய மகளை இன்று பார்க்கையில்
அழுகையாகத்தான் வருகிறது எனக்கு
ஈக்கள் ஆடும் சடலத்தில்
திமிறிய மகளை இன்று பார்க்கையில்
அழுகையாகத்தான் வருகிறது எனக்கு
ஈக்கள் ஆடும் சடலத்தில்
கருமமே கண்ணாய்
எவனோ ஒருவன் விசிறிக்கொண்டிருக்கிறான்
தலைக்குப்பின்னால் புகையும்
ஊதுபத்தி தீரும் போதெல்லாம் குரலொன்று
ஒலிப்பதும் கொழுத்தி வைப்பதும் தொடர்கிறது
கடைசிப்பேருந்தென தவறவிட்டவர்களெல்லாம்
நடுஇரவிலும் அழுது தூக்கத்தை,
அகால மரணத்தை விசாரிக்கின்றனர்
விடியும்வரை பொறுத்திருந்து நீராட்டி
காரியங்கள் செய்து புத்தாடையுடுத்தி
மீண்டும் அழச்சொல்லி கிடத்தியிருக்கின்றனர்
கடைசியாய் முகம் பார்ப்பவர்களையும்
வாய்க்கரிசி போடுபவர்களையும்
வெட்டியான் அழைக்க மகளுக்கு புரிந்துவிட்டது போல
ஈரம் வற்றிய என் உதட்டில்
கன்னத்தை ஒத்தி ஒத்தி எடுக்கிறாள்
எனக்கு மீண்டும் அழுகையாய் வருகிறது!
எவனோ ஒருவன் விசிறிக்கொண்டிருக்கிறான்
தலைக்குப்பின்னால் புகையும்
ஊதுபத்தி தீரும் போதெல்லாம் குரலொன்று
ஒலிப்பதும் கொழுத்தி வைப்பதும் தொடர்கிறது
கடைசிப்பேருந்தென தவறவிட்டவர்களெல்லாம்
நடுஇரவிலும் அழுது தூக்கத்தை,
அகால மரணத்தை விசாரிக்கின்றனர்
விடியும்வரை பொறுத்திருந்து நீராட்டி
காரியங்கள் செய்து புத்தாடையுடுத்தி
மீண்டும் அழச்சொல்லி கிடத்தியிருக்கின்றனர்
கடைசியாய் முகம் பார்ப்பவர்களையும்
வாய்க்கரிசி போடுபவர்களையும்
வெட்டியான் அழைக்க மகளுக்கு புரிந்துவிட்டது போல
ஈரம் வற்றிய என் உதட்டில்
கன்னத்தை ஒத்தி ஒத்தி எடுக்கிறாள்
எனக்கு மீண்டும் அழுகையாய் வருகிறது!
0 comments
Post a Comment