Pin It

Widgets

பிணங்கள் எரியும் காட்டில்
அதன் வாடை நுகர்ந்து
குளிர்காய அழைத்துச்செல்கிறாள் நடுநிசியில்

சிதையூட்டப்பட்ட உடல்

மழையில் நனையாதிருக்க
மோடு போல போர்த்தியிருந்தது ஓடு

ஏற்கனவே சொருகி வைத்திருந்த
கொண்டையூசி எடுத்து
விரல் கிழித்து இரத்தம் பீச்சுகிறாள்

சில்லுகளாய் உடைக்கப்பட்டிருந்த
கலையத்துண்டுகள் சேகரித்து
ஒவ்வொரு சொட்டுகளிட்டு அடுக்குகிறாள்

நிசப்தம் உடைத்து
பேசச் சொல்லி கட்டளையிடுகிறாள்
நான் ஊமையென்றான் செய்கையில்

நிலவின் ஒளியில் மிளிரும்
கள்ளிப்பூவினை சூடச்சொல்லி
ஈரக்கூந்தலை காட்டி திரும்புகிறாள்

நடுங்கும் கைகளால் கேசம் தொட
மனைவியோ பதறியெழுகிறாள்
கழுத்தை இருக்கிய கைகளை பிரித்து!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets