Pin It

Widgets

அவசர அவசரமாய் எழுந்தவள்
இரவு பாதியில் விட்டுப் போன
துணியை தைக்க துவங்கினாள்

கிழிந்த ஆடையோடு
குழந்தையை உறங்க வைத்தவள்
மிதமான சூட்டில் குளிக்க வைத்து

புதிதாய் தைத்திருந்த ஆடையுடுத்தி
அழகு படுத்தி, ஜடை பின்னி
திருஷ்டி பொட்டிட்டாள் யாழினிக்கு!

அறைக் கதவினை அப்பாவிடம்
தாழிட்டு போகச் சொன்னவள்,

மடியில் கிடத்தி முந்தானை விலக்கி
மார்போடு அணைத்து
தலை வருடி கொண்டிருக்கிறாள்

பாலும் வந்தபாடில்லை
பொம்மை குழந்தையும்
குடித்தபாடில்லை!

4 comments

  1. Unknown // April 19, 2012 at 4:26 PM  

    பெரும்பாலும் பெண் குழந்தைகள் வளரும் போதே தாய்மையுள்ளத்துடனே வளர்கிறார்கள்,ரொம்ப அழகான கவிதை வாழ்த்துக்கள் சகோ :)

  2. Unknown // April 21, 2012 at 1:26 PM  

    தங்களது கருத்துக்கு நன்றி

  3. Unknown // February 24, 2015 at 7:48 AM  

    Arumai

  4. Unknown // February 24, 2015 at 2:14 PM  

    நன்றி

Post a Comment

Blogger Wordpress Gadgets