அவசர அவசரமாய் எழுந்தவள்
இரவு பாதியில் விட்டுப் போன
துணியை தைக்க துவங்கினாள்
கிழிந்த ஆடையோடு
குழந்தையை உறங்க வைத்தவள்
மிதமான சூட்டில் குளிக்க வைத்து
புதிதாய் தைத்திருந்த ஆடையுடுத்தி
அழகு படுத்தி, ஜடை பின்னி
திருஷ்டி பொட்டிட்டாள் யாழினிக்கு!
அறைக் கதவினை அப்பாவிடம்
தாழிட்டு போகச் சொன்னவள்,
மடியில் கிடத்தி முந்தானை விலக்கி
மார்போடு அணைத்து
தலை வருடி கொண்டிருக்கிறாள்
பாலும் வந்தபாடில்லை
பொம்மை குழந்தையும்
குடித்தபாடில்லை!
இரவு பாதியில் விட்டுப் போன
துணியை தைக்க துவங்கினாள்
கிழிந்த ஆடையோடு
குழந்தையை உறங்க வைத்தவள்
மிதமான சூட்டில் குளிக்க வைத்து
புதிதாய் தைத்திருந்த ஆடையுடுத்தி
அழகு படுத்தி, ஜடை பின்னி
திருஷ்டி பொட்டிட்டாள் யாழினிக்கு!
அறைக் கதவினை அப்பாவிடம்
தாழிட்டு போகச் சொன்னவள்,
மடியில் கிடத்தி முந்தானை விலக்கி
மார்போடு அணைத்து
தலை வருடி கொண்டிருக்கிறாள்
பாலும் வந்தபாடில்லை
பொம்மை குழந்தையும்
குடித்தபாடில்லை!
பெரும்பாலும் பெண் குழந்தைகள் வளரும் போதே தாய்மையுள்ளத்துடனே வளர்கிறார்கள்,ரொம்ப அழகான கவிதை வாழ்த்துக்கள் சகோ :)
தங்களது கருத்துக்கு நன்றி
Arumai
நன்றி