Pin It

Widgets

---------------------------

Thursday, April 19, 2012 | 0 comments »

என் மனதிற்குள்
அடிக்கடி இலை விரிக்கும்
ஒரு பகல் கனவினை

தூரத்தில் தெரியும்
கானல்நீர் குளத்தில்
மூழ்கடித்துவிட எண்ணி

பிடிவாதமெனும் படகிலேறி
நானும் எனது இயலாமையும்
பயணித்துக் கொண்டிருக்கிறோம்

அறியாமையெனும்
வழிப்போக்கன் ஒருவன்
தத்தளிக்க அவனோடு
மூவராய் பயணம்

உயர பறந்த கழுகு ஒன்று
நழுவவிட்ட புறா குஞ்சு ஒன்றில்
ஏமாற்றங்களையும் ஏக்கங்களையும்
கட்டி விட்டிருக்கிறேன்

வழியில் எங்கேனும்
அந்த புறாவினை காண நேர்ந்தால்
என் வீடு சேர்த்து விடுங்கள்

தனித்து நிற்கும்
ஒற்றை பனைமரமொன்றில்
கூடு கட்டி வாழும் கழுகிற்கு
பசியாற்ற போகிறேன்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets