அவள்
எச்சில் தெறிக்கும்
கன்னத்து முத்தம் தொடங்கி
கலைந்திட்ட போர்வையினை
கரைதள்ளி
மார்பினை தலையணையாக்கி
இடை சேர்ந்த விரல் பிரித்து
கேசத்தில் நுழைத்து
தேகத்திலொரு பயணம்...
இங்கொன்றும் அங்கொன்றுமாய்
குவித்திட்ட முத்தத்தத்தில்
தாழ் திறந்த தாமரையால்
நீட்டித்த நரம்புகளை
ஆழத்தில்
திணித்திட முயலுகிறது ஒரு வேகம்
தாகத்தில் உதிர்ந்திட்ட
தாளத்தில் அறை தொட்ட
ராகத்தின் முடிவில்
உயிர் கொண்டு திரளும்
வெள்ளை மேகத்திற்கு
அவளெனும் நிலவே துணை!
எச்சில் தெறிக்கும்
கன்னத்து முத்தம் தொடங்கி
கலைந்திட்ட போர்வையினை
கரைதள்ளி
மார்பினை தலையணையாக்கி
இடை சேர்ந்த விரல் பிரித்து
கேசத்தில் நுழைத்து
தேகத்திலொரு பயணம்...
இங்கொன்றும் அங்கொன்றுமாய்
குவித்திட்ட முத்தத்தத்தில்
தாழ் திறந்த தாமரையால்
நீட்டித்த நரம்புகளை
ஆழத்தில்
திணித்திட முயலுகிறது ஒரு வேகம்
தாகத்தில் உதிர்ந்திட்ட
தாளத்தில் அறை தொட்ட
ராகத்தின் முடிவில்
உயிர் கொண்டு திரளும்
வெள்ளை மேகத்திற்கு
அவளெனும் நிலவே துணை!
கவிதையின் அர்த்தமும் ஆழமும் புரிகிறது. கலக்கலான ரொமாண்டிக் கவிதை.
என்னுடைய கவிதையும் உங்களின் வலைச்சரத்தில் இடம் பெற செய்து என்னை திக்குமுக்காட வைத்த உங்களுக்கு நன்றி கணேஷ் சார்
நன்றி விச்சு சார்