Pin It

Widgets

வெகு நேர காத்திருப்புக்கு பின்
படுக்கையறைக்கு சென்றான்
அவள் உறங்கிக் கொண்டிருந்தாள்

வழக்கமாய் எரியவிடும்
இரவு விளக்கினை
அணைத்து விட்டிருந்தாள்

சரி,
போர்வை போர்த்திவிட எத்தனிக்க
தலை கால் தெரியாத அளவிற்கு
இறுக மூடியிருந்தாள்...

ஊடல் நாட்களில் கூட
அவள் உறங்கியதாய் நினைத்து
அவனோ
அவன் உறங்கியதாய் நினைத்து
அவளோ

கொடுத்து உறங்கும்
உச்சந்தலை முத்தம் கூட
கொடுக்கப்படவில்லை..

வேலை களைப்பில் உறங்குவாளென
கால் பிடித்துவிட கட்டில் நெருங்குகையில்
உள்ளங்கை வியர்க்க துவங்கிய அவனுக்கு,

அழ வேண்டும் போலிருந்தது
அழுதான் தலையணை கடித்து அழுதான்
அவளுக்கு கேட்டிடாதபடி
அறையின் வெளியே தாழிட்டு அழுதான்

அவளுக்கான விரிப்புகளும்
ஒரு குவளை நீரும்
எல்லா பொழுதுகளிலும்
அப்படியே தான் இருந்தது!

அவன் மனதிற்குள்ளிருந்து
அவள் எழவே இல்லை!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets