Pin It

Widgets

நடந்த நிகழ்வுகளின் துயரம் தாளாது
சாளரங்களின் திரை விலக்கி
ஆள் அரவமற்ற சாலை பார்த்து நின்றிருக்க

சாலையாவும் சிதறி கிடக்கும்
மின் விளக்குகளின் வெளிச்சத்தில்

சிறு குழந்தை ஒன்று
புதைத்துவைத்த விதைகள்
மொத்தமாய் முளைவிடுவது போல

அவளுடன் கழித்திட்ட பொழுதுகள்
காணும் திசையெங்கும்
துளிர்விட்டு நிற்கின்றன

ஞாபகமாய் வைத்திருந்த
மின்னஞ்சல்களின் நகல்களிலும்
வாழ்த்து அட்டைகளிலும் வார்த்தைகளிருந்தும்
வாசிக்கமுடியாமல் கண்ணீர் முட்ட,

முன்னமே பதிவு செய்திருந்த
அலைபேசி உரையாடல்களை
தொடர்ச்சியாய் கேட்டபடி
இரவினை கடத்திக்கொண்டிருக்கையில்

உன்னை தவறவிட்டேன் என்றொரு
ஆங்கில சொல்லாக்கத்தின்
குறுஞ்செய்தியோடு விடைபெறுகிறாள்
இன்று அவளுக்கு முதலிரவு!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets