நடந்த நிகழ்வுகளின் துயரம் தாளாது
சாளரங்களின் திரை விலக்கி
ஆள் அரவமற்ற சாலை பார்த்து நின்றிருக்க
சாலையாவும் சிதறி கிடக்கும்
மின் விளக்குகளின் வெளிச்சத்தில்
சிறு குழந்தை ஒன்று
புதைத்துவைத்த விதைகள்
மொத்தமாய் முளைவிடுவது போல
அவளுடன் கழித்திட்ட பொழுதுகள்
காணும் திசையெங்கும்
துளிர்விட்டு நிற்கின்றன
ஞாபகமாய் வைத்திருந்த
மின்னஞ்சல்களின் நகல்களிலும்
வாழ்த்து அட்டைகளிலும் வார்த்தைகளிருந்தும்
வாசிக்கமுடியாமல் கண்ணீர் முட்ட,
முன்னமே பதிவு செய்திருந்த
அலைபேசி உரையாடல்களை
தொடர்ச்சியாய் கேட்டபடி
இரவினை கடத்திக்கொண்டிருக்கையில்
உன்னை தவறவிட்டேன் என்றொரு
ஆங்கில சொல்லாக்கத்தின்
குறுஞ்செய்தியோடு விடைபெறுகிறாள்
இன்று அவளுக்கு முதலிரவு!
சாளரங்களின் திரை விலக்கி
ஆள் அரவமற்ற சாலை பார்த்து நின்றிருக்க
சாலையாவும் சிதறி கிடக்கும்
மின் விளக்குகளின் வெளிச்சத்தில்
சிறு குழந்தை ஒன்று
புதைத்துவைத்த விதைகள்
மொத்தமாய் முளைவிடுவது போல
அவளுடன் கழித்திட்ட பொழுதுகள்
காணும் திசையெங்கும்
துளிர்விட்டு நிற்கின்றன
ஞாபகமாய் வைத்திருந்த
மின்னஞ்சல்களின் நகல்களிலும்
வாழ்த்து அட்டைகளிலும் வார்த்தைகளிருந்தும்
வாசிக்கமுடியாமல் கண்ணீர் முட்ட,
முன்னமே பதிவு செய்திருந்த
அலைபேசி உரையாடல்களை
தொடர்ச்சியாய் கேட்டபடி
இரவினை கடத்திக்கொண்டிருக்கையில்
உன்னை தவறவிட்டேன் என்றொரு
ஆங்கில சொல்லாக்கத்தின்
குறுஞ்செய்தியோடு விடைபெறுகிறாள்
இன்று அவளுக்கு முதலிரவு!
0 comments
Post a Comment