Pin It

Widgets

ஒரு கனவு

Thursday, April 19, 2012 | 0 comments »

விலகி கிடந்த போர்வையை
போர்த்திவிட்டு அவளை
அணைத்தபடி படுத்திருந்தான்

பின்னங்கழுத்தோர கேசத்தில்
மூச்சுக் காற்று பரவ
சூடேறிய தேகத்தோடு,

தூக்கம் கலைந்தவள்
அவன் மார்பில் முகம் புதைத்து
இதமாய் அணைத்துக் கொண்டாள்

வள்ளுவன் கோர்த்த மூன்றாம் பாலை
வியர்வை முத்துக்களாய் சிதறவிட்டு
முனகியபடி மூச்சிறைத்தவள்

தொப்பென
தரையில் விழுந்தாள்
அது கனவு!

விழுந்தவள் மேலெழும்பி
தலையணை இடைசொறுகி
உறங்கிப் போகிறாள்

அந்த முதிர்கன்னியின்
தாய்
விசும்பி அழுது கொண்டிருக்கிறாள்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets