Pin It

Widgets

அன்றைய இரவின்
கடைசி இரயில்
தண்டவாளத்தை உரசி சென்ற பின்

முகிலினங்களின் ஊடே
கிழிந்தொழுகும் நிலவின்
வெளிச்சப்பரவலில் சிறு புள்ளியாய்

தண்டவாளத்தின் நடுவே
புணர்ந்து கொண்டிருந்தோம்
நானும் ஒரு கோப்பை மதுவும்

வண்டினங்களின் இறக்கை
இரைச்சல்களும்
சாமத்தில் கலையும்
காகங்களின் கரையும் சத்தமும்
புணர்தலுக்கான பின்னணி இசை!

விரல் இடுக்கினில் தொக்கி நிற்கும்
ஊறுகாயோடு பிசுபிசுக்கும்
வியர்வையினை நக்கி சுவைத்தபடி
அந்த இரவில் உறங்கிப்போக,

படபடக்கும் குரலில்-எனை
அதிகாலையில் தட்டியெழுப்பியவள்
கைக்குழந்தையோடு சாக வந்தவளாம்
நாளை?

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets