Pin It

Widgets

ஒரு ஞாயிறு மாலையில்
முன்னறிவிப்பின்றி
தோழிகளோடு தங்கியிருந்த-உன்
வீடு வந்திருந்தேன்

நீர் நிரம்பிய பாத்திரத்தில்
உன் பாதம் உள்வைத்து
சுத்தம் செய்துகொண்டுருந்தாய்

இதழ்களில் தேங்கி நிற்கும்
பனி துளிகள் சொட்டுவது போல்
அழகாய் சிரித்து வைத்தவள்,

வாவென அழைத்து
கண்களால் எதேதோ பேசினாய்
ஒரு கோப்பை தேனீர் கொடுத்தாய்

தோழிகள் ஒவ்வொருத்தியாய்
ஒரு கை குலுக்கலோடு
அறிமுகம் செய்து வைத்தாய்

நினைவிருக்கிறதா?

இரு கைகளிலும்
மருதாணி ஏந்தி நின்ற
உன் சித்திமகள்
"ஏய் அத்தான்" என்றாள்..!

அன்றிரவு நீயும் என்னை
காதலிப்பதாய்
அறை நண்பர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தேன்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets