Pin It

Widgets

இறந்தவன் உடலுக்கு
விரகேற்றி தீயிட்டு
புகைத்து மிஞ்சிய
சுருட்டினை பற்ற வைத்தபடி

தனது படுக்கைக்கும்
எரியும் சடலத்துக்குமான
இடைவெளியில்

அன்றைய பகல் பொழுதின்
கதறல்களையும்
வந்து போனவனின்
முகபாவனையையும்  காட்சியோட்டி

நண்பன், எதிரி
உற்றவன், உண்மையானவன்
பகைவன், சதிகாரன் என

கால் கடக்கும் இடைவெளியில்
இறந்தவன் வாழ்ந்த வாழ்வினை

காற்றிடம் சொல்லிப்போகும்
இவன்
நம் பார்வையில் வெட்டியான்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets