இறந்தவன் உடலுக்கு
விரகேற்றி தீயிட்டு
புகைத்து மிஞ்சிய
சுருட்டினை பற்ற வைத்தபடி
தனது படுக்கைக்கும்
எரியும் சடலத்துக்குமான
இடைவெளியில்
அன்றைய பகல் பொழுதின்
கதறல்களையும்
வந்து போனவனின்
முகபாவனையையும் காட்சியோட்டி
நண்பன், எதிரி
உற்றவன், உண்மையானவன்
பகைவன், சதிகாரன் என
கால் கடக்கும் இடைவெளியில்
இறந்தவன் வாழ்ந்த வாழ்வினை
காற்றிடம் சொல்லிப்போகும்
இவன்
நம் பார்வையில் வெட்டியான்!
விரகேற்றி தீயிட்டு
புகைத்து மிஞ்சிய
சுருட்டினை பற்ற வைத்தபடி
தனது படுக்கைக்கும்
எரியும் சடலத்துக்குமான
இடைவெளியில்
அன்றைய பகல் பொழுதின்
கதறல்களையும்
வந்து போனவனின்
முகபாவனையையும் காட்சியோட்டி
நண்பன், எதிரி
உற்றவன், உண்மையானவன்
பகைவன், சதிகாரன் என
கால் கடக்கும் இடைவெளியில்
இறந்தவன் வாழ்ந்த வாழ்வினை
காற்றிடம் சொல்லிப்போகும்
இவன்
நம் பார்வையில் வெட்டியான்!
0 comments
Post a Comment