Pin It

Widgets

ஒரு இரவினை திருடி
அவளை மடியில் கிடத்தி
இது உனக்கு அது எனக்கு என்றேன்

இல்லை இல்லை
எனக்கு மட்டும் என்றாள்

மூடிய விழியில்
வழிந்தோடும் காட்சிகள்
உன்னோடு என்றும்,

விழிமுன் உனை நிறுத்தி
மெய்மறக்க செய்யும் காட்சிகள்
என்னோடு என்றேன்...

ம்ம்ம் என புரண்டவள்
நிலவினை சூழ்ந்த மேகம் போல
போர்வைக்குள் மறைய

அவள்
நாணக்குடை பிடித்தாள்
குடைக்குள் மழை!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets