அன்றொரு நாள்
இவளும் இப்படித்தான்
அழுது கொண்டிருந்தாளாம்...,
வார்த்தைகளோ இல்லை
ஆறுதல் சொல்வதோ
மருந்து இல்லை என்பது
அவளும் அறிந்த ஒன்று தான்!
இருந்தும் நான் அழுவது கண்டு
ஆறுதல் சொல்ல
என்னை அவள் மடியில்
சாய்த்துக் கொண்டாள்!
கசிந்து கொண்டிருக்கும்
என் குருதியின் வாடை
அருகில் துயிலில் இருந்த
யாருடைய நாசியும்
துளைக்கவில்லை போலும்...
இரவின் நிர்வாணம்
அப்படி இவர்களை
பழக்கப் படுத்தியிருக்கலாம்!
என்னை அவள் தேற்ற
முயல்கிறாள் முடியாமல்
வார்த்தையில் உடைகிறாள்...
சிறிது மெளனம் திண்று
அவள் சோகம் தொடர்ந்தவள்
இரவு என்பதனால்
தன் அடிவயிற்றில் வலி கொடுத்தவன்
மனிதன் என்பது தவிர
அடையாளம் ஏதும்
தெரியவில்லை என்றாள்...
அவன் விட்டு சென்ற
தடயம் ஏதேனும்
இருக்கிறதா என்றால்
என்னை கை நீட்டுகிறாள்
என் தாய்!
தூரத்திலிருந்து கைகாட்ட கூட
அவன் முகம்
அவளும் அறியவில்லை...
இப்பொழுது என்னிடமும்
அடி வயிற்றில் வலி தவிர
வேறொன்றும் இல்லை!
இவளும் இப்படித்தான்
அழுது கொண்டிருந்தாளாம்...,
வார்த்தைகளோ இல்லை
ஆறுதல் சொல்வதோ
மருந்து இல்லை என்பது
அவளும் அறிந்த ஒன்று தான்!
இருந்தும் நான் அழுவது கண்டு
ஆறுதல் சொல்ல
என்னை அவள் மடியில்
சாய்த்துக் கொண்டாள்!
கசிந்து கொண்டிருக்கும்
என் குருதியின் வாடை
அருகில் துயிலில் இருந்த
யாருடைய நாசியும்
துளைக்கவில்லை போலும்...
இரவின் நிர்வாணம்
அப்படி இவர்களை
பழக்கப் படுத்தியிருக்கலாம்!
என்னை அவள் தேற்ற
முயல்கிறாள் முடியாமல்
வார்த்தையில் உடைகிறாள்...
சிறிது மெளனம் திண்று
அவள் சோகம் தொடர்ந்தவள்
இரவு என்பதனால்
தன் அடிவயிற்றில் வலி கொடுத்தவன்
மனிதன் என்பது தவிர
அடையாளம் ஏதும்
தெரியவில்லை என்றாள்...
அவன் விட்டு சென்ற
தடயம் ஏதேனும்
இருக்கிறதா என்றால்
என்னை கை நீட்டுகிறாள்
என் தாய்!
தூரத்திலிருந்து கைகாட்ட கூட
அவன் முகம்
அவளும் அறியவில்லை...
இப்பொழுது என்னிடமும்
அடி வயிற்றில் வலி தவிர
வேறொன்றும் இல்லை!
பல விடயங்களைச்சாடும் கவிதை சூப்பர்
நன்றி