Pin It

Widgets

பகலென்றும் இரவென்றும்
யூகிக்க முடியாமலும்,
அது ஒரு அறை என்றும்
இல்லை வீதி என்றும்
சரிவர சொல்ல முடியாமலும்
ஓவியம் ஒன்று
என் விழிகள் இரண்டையும்
ஆட்படுத்தியிருந்தன...

அதனருகே சிதறிக் கிடந்த
இன்னபிற ஓவியங்களையும்
இவைகள் இன்னதென்று
எதனுடனும் ஒப்பீடும்
செய்திட இயலவில்லை...

என்னால் ஈர்க்கப்பட்ட
அந்த ஓவியமும்
மனிதனின் சாயல் என்பது தவிர
வேறெதையும் என் சிந்தனைக்கு
உணர்த்தவில்லை!

என்னையும் அறியாது
நான் சுற்றி சுற்றி வர
வரைந்தவன் பார்வையற்றவன்
என்று எண்ணச் சொல்கிறது மனது

அவ்வழியாய் வந்தவர்கள்
ஓவியன் இறந்து விட்டதாய்
எங்கோ இழுத்துச்செல்ல
யாவரும் இருளில்
மறைந்து  போகின்றனர்...

மீண்டும் ஓவியத்தை
உற்று நோக்க
அவன் இழுத்துச் செல்லப்பட்ட
இடத்தில்
உள்ளங்கையில் தாங்கும் அளவிற்கு

வெட்டப்படாத
தொப்புள் கொடியோடும்
பனிக் குடம் உடைந்து
நீர்கறையாகவும்
ஓவியத்தில்
சிசுக்களாய் நிறைத்து கிடக்கின்றன.

ஒருவேளை அந்த ஓவியம்
யாருக்கும் புலப்படாத
ஆதாம் என்றால்

இரத்தமும் சதையுமாய்
சிதறிக் கிடக்கும்
சிசுக்களை வீசிச்சென்ற
ஏவாள் எங்கே?

குருடன் என்று
எண்ணத் தோன்றிய
ஓவியன் யார்?

2 comments

  1. K.s.s.Rajh // October 30, 2011 at 9:02 PM  

    அழகு...........

  2. Unknown // April 21, 2012 at 3:05 PM  

    நன்றி

Post a Comment

Blogger Wordpress Gadgets