Pin It

Widgets

தீபாவளி

Tuesday, October 11, 2011 | 2 comments »

இதுவரை வராத அழைப்பும்
கேட்டிராத குரலும்
நேற்று என் அலைபேசியில்...,

சம்பிரதாய நலன்
விசாரிப்புகளுக்குப் பின்
பேசிட வார்த்தைகள் ஒன்றும்
கிடைப்பதாய் இல்லை
இருவருக்கும்!

தமயனுக்கே
உரிய தொனியில்
ஒரு அதட்டலும்
அறிவுரைகளும் கூறி முடிக்க

தனது தேவை 
என்னவென்று
முதன் முறையாக
வினவுகிறான் தம்பி ..,

தனது அன்றாட பொழுதுகள்
கழியும் விதம் பகிர்வதும்
எனக்கும் நியாயமாய் படவில்லை!

தம்பியும் பெரிதாய் ஒன்றும்
கேட்டுவிடவில்லை..,

அண்ணா தீபாவளிக்கு
எனக்கு ஒரு பண்ட்
ஒரு சட்டை!

பாவாடை சட்டையில்
இருந்த தங்கையோ
இம்முறை
சுடிதார் கேட்டிருக்கிறாள்..

இதோ இந்த சென்னையில்
இன்று காலை
பற்பசையின்றி
வேப்பமர குச்சி தேடி அலைந்த

என்னை போன்ற
அண்ணன் மார்களின்
நிலைமை தம்பி, தங்கை
அறிய வாய்ப்பில்லை,
சொல்வதும் நாகரீகம் இல்லை!

2 comments

  1. K.s.s.Rajh // October 11, 2011 at 5:07 PM  

    வணக்கம் நண்பரே உங்கள் கவிதைகள் ரசிக்கவைக்கின்றன நன்றாக எழுதுகின்றீர்கள் வாழ்த்துக்கள்

  2. Unknown // October 13, 2011 at 12:10 AM  

    நன்றி ராஜ்

Post a Comment

Blogger Wordpress Gadgets