Pin It

Widgets

அறை எண்___

Sunday, October 09, 2011 | 0 comments »


தூண்டப்படாத
விளக்கொன்றில்
குடியிருக்கும் அறையில்

அவனும் அவனுமாகிய
தனிமையும்

விசும்பல் வெளியே
கேளாதிருக்க-தன்
மெளனத்தினால்

சத்தமாய்
இரைந்து கொண்டிருந்தான்
மனதில்!

மனித உருவம்
பொரித்த வியர்வை
வரைபடம் ஒன்று

முதுகின் கீழ்
கால்கள் ஒடுக்கி
படுத்திருக்க

அவன்
தனித்திருப்பது அறிந்து
ஒற்றை சன்னலும்
தாழிட்டுக் கொண்டது

ஏமாற்றத்தின்
பிம்பங்கள் யாவும்
கருப்பு வெள்ளைக்
காட்சிகளாய்

அவன் கன்னத்தில்
பிரதிபலிக்கும்
கண்ணீர் ஒவியங்களாய்

தூரிகையின்றி
வரையப்படும்
இரவுக் காகிதங்கள்

இன்றும் தொடர்ந்து
கொண்டுதான் இருக்கிறது...

அறை எண் மாறினாலும்
நிகழ்வுகள் மாறாமல்!
நினைவுகள் மாறாமல்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets