இவைகள் இவைகளாக
இருந்தது இல்லை
வெளீர் பச்சை
நிறம் சொருகி
அதிகாலை சூரியனுக்கு
தன்னை படையல் வைக்கிறது
அவ்வழியாய் கடத்து போகும்
ஒரு புகைப்படக்காரன்
தன் நிழற்படக் கருவியில்
அடைத்துச் செல்கிறான்...
அவன் மாட்டி வைத்த
கண்ணாடி குடுவை வழியாய்
சிலர் கண்களை
ஈர்த்துச் செல்கிறது
அந்த இளந்தளிர்!
பொழுதுகள் புரள புரள
துளிர் விட்டு
வளர துவங்குகிறது...
வளரும் காலங்களில்
சில வெட்டுக்கிளிகள்
இலைகளை கூர் பார்க்கிறது
பறவைகளின் எச்சில் படுகிறது
காய்கனிகளுக்கிடையே
கல்லடியும் படுகிறது....
திடுமென ஒருநாள்
இவ்விலைகள் எல்லாம்
சிலருக்கு நிழலாய்
உட்புகுத்தப்படுகிறது!
இவைகள் பழுப்பு நிறம்
கடக்கும் பொழுது
துளிர்கள் எல்லாம்
இலைகளாக மாற
அப்பழுப்பிலைகள்
உதிரத் துவங்குகிறன...
சிற்சில காற்றில
அலைகிறது...
சிற்சில மரத்தினடியில்
மவுனித்து கிடக்கிறது....
சிற்சில
மண்ணில் உரமாகிறது...
சிற்சில
தீயினில் சாம்பலாகிறது...
இப்படித் தான் மனித
வாழ்க்கையும்!
இருந்தது இல்லை
வெளீர் பச்சை
நிறம் சொருகி
அதிகாலை சூரியனுக்கு
தன்னை படையல் வைக்கிறது
அவ்வழியாய் கடத்து போகும்
ஒரு புகைப்படக்காரன்
தன் நிழற்படக் கருவியில்
அடைத்துச் செல்கிறான்...
அவன் மாட்டி வைத்த
கண்ணாடி குடுவை வழியாய்
சிலர் கண்களை
ஈர்த்துச் செல்கிறது
அந்த இளந்தளிர்!
பொழுதுகள் புரள புரள
துளிர் விட்டு
வளர துவங்குகிறது...
வளரும் காலங்களில்
சில வெட்டுக்கிளிகள்
இலைகளை கூர் பார்க்கிறது
பறவைகளின் எச்சில் படுகிறது
காய்கனிகளுக்கிடையே
கல்லடியும் படுகிறது....
திடுமென ஒருநாள்
இவ்விலைகள் எல்லாம்
சிலருக்கு நிழலாய்
உட்புகுத்தப்படுகிறது!
இவைகள் பழுப்பு நிறம்
கடக்கும் பொழுது
துளிர்கள் எல்லாம்
இலைகளாக மாற
அப்பழுப்பிலைகள்
உதிரத் துவங்குகிறன...
சிற்சில காற்றில
அலைகிறது...
சிற்சில மரத்தினடியில்
மவுனித்து கிடக்கிறது....
சிற்சில
மண்ணில் உரமாகிறது...
சிற்சில
தீயினில் சாம்பலாகிறது...
இப்படித் தான் மனித
வாழ்க்கையும்!
0 comments
Post a Comment