Pin It

Widgets

கைபேசி

Monday, October 03, 2011 | 0 comments »

பாதி தூக்கம் கலைத்து
என் காதுகளில்
அமர்ந்து கொள்கிறாய்..,

அனுமதியின்றி
என் விரல்களால்
தீண்டப்படுகிறாய்

எவனோ ஒருவன்
தூக்கம் தொலைக்கிறான்
என் தூக்கம் கலைக்க
தூது போகிறாய்..,

என் மார்பினிலே அதிக
நேரம் தவழ்கிறாய்
என் முதுகினில்
மாட்டிக் கொண்டு
தவிக்கிறாய்!

சில நேரம் மென்மையாய்
பாட்டிசைக்கிறாய்..,
நான் சோர்வடைந்தால்
மெளனமாக இரைந்து
சுழலுகிறாய்..,

என்னோடு அதிகமாய்
படுக்கையில்
புரண்டவள் என்பதனால்

சாட்சிக்காக பெருவிரல்
ரேகை வேறு
வாங்கிக் கொள்கிறாய்

சூடாகிறாய்
சூடேற்றிப் பார்கிறாய்
உன் உடல் மீதான தாகம்
எனக்குத் தீர்ந்திருக்குமோ?

இன்னோருவன்
கைத் தீண்டலில் நீ
என்னொருத்தி
உடல் மொழியில் நான்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets