Pin It

Widgets

ஒரு இரவிற்கு முன்னரே
அவன் வருகையினை
வீதியெங்கும்
உமிழ்ந்துச் சென்றான்..,

யார் யார் என்னவெல்லாம்
"படி" செலுத்தலாம் என
தீர்மானிக்கும் கூட்டம்
நிகழ்ந்தவாறு இருக்க,

எவள் வீட்டு முன் நின்று
எந்த திசையிலிருந்து
மாப்பிள்ளை வருவான்,
குறி சொல்வது கேட்டு
தெரிந்து கொள்ள

கன்னியர்கள் சிலர்
இரவு விழித்திருக்க
ஆயத்தம் ஆகினர்..,

நிறை மாத கர்ப்பிணி
பெண்ணொருத்தி
பிள்ளை என்னவாய்
இருக்குமென
ஆவலாகிறாள்

மாமியார் நினைத்து
அச்சம் பூணுகிறாள்
கள்ளிப் பால் பூமி!

தெருக்களில்
விளையாடித் திரியும்
சிறார்கள் அனைவரும்
கருக்கலிலே
வீடடைக்கப் பட்டனர்..,

தன் ஆயுட்காலம்
முடிவினை அறியவும்,
திண்ணைக் கிழம் ஒன்று
காது கூர்மையாக்குகிறது!

கோடங்கி வீற்றிருக்கும்
வீதியில்
சாவுக் குருவி ஒன்று
பாடிச் சென்றதாம்..,

புலம் பெயர்ந்து
கொண்டிருக்கிறான்
இவர்கள் உறக்கம் தொலைத்து
புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்..,

இன்னும் வருவதாயில்லை
இவர்கள் மேல் நம்பிக்கை
இவர்களுக்கு!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets