குவியல் குவியலாய்
நீண்டு கிடக்கும்
மணல் மேடுகளில்
கற்றாளை செடிகள்
முட்கள் நீட்டியும்,
பாம்பென நீளும்
சில கொடிகளும்
படர்ந்து கிடக்க..,
ஒவ்வொரு நீள்
குவியல் நோக்கி
ஒற்றையடி பாதையும்
பயணிக்கின்றன..,
இறுதியாய் உடைக்கப்பட்ட
கலசத்தின் துண்டுகளும்
பூக்கள் உதிர்ந்த
நார்களும்
எஞ்சியிருக்க,
வருடத்தின் ஒருநாள்
சிறு மெழுகுவர்த்தியோ
ஒரு மாலையோ
வைத்துவிட்டு
செல்கின்றனர்..,
கரையான்
அரித்து விட்டு போன
அந்த வெற்று குழியில்!
0 comments
Post a Comment