Pin It

Widgets

ஒரு நத்தையென
நினைவுகளை
சுமந்துகொண்டு
நடக்கலானேன்..,


அதிகாலை காட்சிகள்
அவ்வளவு எளிதாய்
எதையும் கடக்க
அனுமதிக்கவில்லை!


பாதங்கள் வழியே
செம்மண் புழுதிச்
சாரல்கள் என்
உடலேறி ஆரவாரம்
செய்தன!


கதிரவன் வெளிச்சம்
துணை வாங்கி
மலர்ந்து நிற்கும்
கள்ளி பூக்கள்
ரசித்து நடக்க,


தட்டான்கள்
ராஜா, ராணி
ஆன கதையும்
என்னில் இன்று
நினைவில் தான்!


வெள்ளை சிகப்பு நிற
அரளி பூக்களும்
பூப்பறிக்கும்
சிறுவர் சிறுமிகள்
சிலாகித்தலும் கண்டு


இன்னுமொரு முறை
டவுசர் சட்டை போட்டு பார்க்க
ஆசையும்
வந்ததெனக்கு!


பனை ஓலைப் பட்டை
பிடித்து
நான் பருகிய
பதநீரும்
மாங்காய் துண்டுகளும,


இன்றும் அதே
பனைமர காட்டில்
எனக்காய் காத்திருப்பதாய்
தொலை பேசி
அழைப்பிருக்கு!


இதோ இந்த
ஒற்றை கால்
கொக்கின் தவத்தினை போல்
ஒத்திருக்கிறது
எனது இன்னுமொரு கனவு!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets