என்னையும் அறியாது
உன் புகைப்படம்
கையிலேந்தி அமருகிறேன்..,
என் விரல்கள்
புரட்டும் பக்கங்கள் நின்று,
கண்ணில் காட்சிகளாகி
வரிசையாய்
கோர்க்கப்பட்ட
நிகழ்வுகள் யாவும்
தனித்தனிச் சுவடுகளை
முன்னிறுத்திக் கொள்கிறது..,
எனை கொல்கிறது!
இரத்த நாளங்கள்
கண்களை பிளந்து
நீரென தெறித்து விழ
கண்ணாடித் திரையில்
விழும் பிம்பம் ஒன்று
கதறி அழுவது கண்டு,
யாரும் பார்த்திடா
வண்ணம் எனதறை
தாழிட்டுக் கொண்டேன்!
இரவின் நிசப்தத்தில்
என் அழுகுரல்
கேளாதிருக்க-என்
கை கடித்திருந்தேன்..,
எவனோ ஒருவன்
கதவு தட்டி நிற்க
திறக்க முயன்று
தோற்றுப் போகிறேன்
என் புன்னகையிடம்!
உன் புகைப்படம்
கையிலேந்தி அமருகிறேன்..,
என் விரல்கள்
புரட்டும் பக்கங்கள் நின்று,
கண்ணில் காட்சிகளாகி
வரிசையாய்
கோர்க்கப்பட்ட
நிகழ்வுகள் யாவும்
தனித்தனிச் சுவடுகளை
முன்னிறுத்திக் கொள்கிறது..,
எனை கொல்கிறது!
இரத்த நாளங்கள்
கண்களை பிளந்து
நீரென தெறித்து விழ
கண்ணாடித் திரையில்
விழும் பிம்பம் ஒன்று
கதறி அழுவது கண்டு,
யாரும் பார்த்திடா
வண்ணம் எனதறை
தாழிட்டுக் கொண்டேன்!
இரவின் நிசப்தத்தில்
என் அழுகுரல்
கேளாதிருக்க-என்
கை கடித்திருந்தேன்..,
எவனோ ஒருவன்
கதவு தட்டி நிற்க
திறக்க முயன்று
தோற்றுப் போகிறேன்
என் புன்னகையிடம்!
0 comments
Post a Comment