வர்ணத்தைப் பழக்கும் வித்தையை
இருவரில் ஒருவர் மல்லாந்து,
அல்லது
இருவரில் ஒருவர் ஒருக்களித்துப்
படுக்கக் கூடிய கட்டிலில்
விழிகளுக்கு மிக நெருக்கமாய்
கொண்டு நிறுத்தித் தொடங்கினாய்...
தூக்கக் கலக்கத்தில்
உடல்களின் நடுவே ஒட்டிக் கொள்ளும்
இரத்த நிறப் போர்வை பிரித்து
இடைவெளி நிரப்பும் சூட்டிலிருந்து தான்
ஆவியாகிப் பொழியத் தொடங்கியது
கேள்வியினோடே சொல்லிக் கொண்ட
அன்றைய பதிலைப்போல இல்லை
உள் எழும் கேள்விகளுக்கு
பதில்கள்...
இருவரில் ஒருவர் மல்லாந்து,
அல்லது
இருவரில் ஒருவர் ஒருக்களித்துப்
படுக்கக் கூடிய கட்டிலில்
விழிகளுக்கு மிக நெருக்கமாய்
கொண்டு நிறுத்தித் தொடங்கினாய்...
தூக்கக் கலக்கத்தில்
உடல்களின் நடுவே ஒட்டிக் கொள்ளும்
இரத்த நிறப் போர்வை பிரித்து
இடைவெளி நிரப்பும் சூட்டிலிருந்து தான்
ஆவியாகிப் பொழியத் தொடங்கியது
கேள்வியினோடே சொல்லிக் கொண்ட
அன்றைய பதிலைப்போல இல்லை
உள் எழும் கேள்விகளுக்கு
பதில்கள்...
0 comments
Post a Comment