Pin It

Widgets

இருவருக்குமான மேஜையில்
பாதிப் பருகிய பழச்சாறின் நுரை
கோப்பையின் உள்ளே வடிகிறது
குறைந்த வெளிச்சத்திற்குப் 
பழகிய கண்களில் நீ
மங்கலாகத் தெரிகிறாய்
கண்ணாடியில் பார்த்துவிட்டு
பொருந்தவில்லையென
போனது போலவே வருகிறாய்
கேள்வியற்ற உதட்டிற்கு
தாளிடவில்லையென
விரல் கோர்த்தாய்
நியாயப்படுத்துதலின் நியாயங்களை
காலம்
எளிதில் அனுமதிப்பதில்லையென
சமாதானம் சொல்லிக் கொண்ட பின்
குரல் கேட்கப் பயமாய் இருக்கிறதென
அழைக்க மறுத்தாய் அதே பிடிவாதத்தோடு

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets