Pin It

Widgets

நீ கருணையற்று 
மிச்சம் வைத்திருக்கும் நிழலின் 
கொடிய மிருகத்தை 
மடிப்புகளில் விட்டிருக்கிறாய்

இருக்கையின் வலது பக்கம்
சிதறிக்கிடக்கும் நகத்துண்டுகள்
மான் மேயும் லாவகங்கள்

முள் பிரிக்காது உண்ணும்
நெத்திலி மீன்
நம்பிக்கைப்பற்றி கேட்கிறாய்

பிறகு
காமச்செதில்களை உதிர்த்து
கண்களில் பொருத்திவிட்டு
'அப்புறம்' என்கிறாய்

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets