அடித்துச் சாத்திய
சன்னலின் இடுக்கிலிருந்து
சுவரோவியம்
வரைந்துகொண்டிருந்த மழையை
கலைந்த கனவின் ஏதோவொ ரு
முடிச்சின் தொடர்ச்சியென
திறவா கண்கொண்டு பார்க்கிறாய்
தானாகவே முன்வரும்
நிறமற்ற முலைகளை நிஜமென
கவ்வ எத்தனிக்கையில்
தூக்கத்தில் ஊறிய எச்சில் ஒழுகுகிறது.
யார் மீதும் புகார்களற்ற அந்தக் கனவில்
பாலின சந்தேகம தூங்குவதாயில்லை
0 comments
Post a Comment