Pin It

Widgets

தவளையின் தாவலென
முன்னதுக்கும் இன்னதுக்குமான
இடைவெளி
கிளர்ந்தெழும் நரம்புகளின்
பசியென தீனியிடுகிறாய்
வெளவாலின் கருங் குருதியை
நினைவுபடுத்துகிறது-உன்
வேட்கைக்கு உண்ணக்கொடுக்கும் உடல்

மங்கிய ஒளியில்
குளியலறை வாசலில் நின்று-நீ
சிந்தும் புன்னகையைத் தான்
துடைத்தெறிந்து கொண்டிருக்கிறேன்
இந்நாளில்

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets