என் காதுகளில்
இசைந்து கொண்டிருக்கும்
பாடலில்
பல புதிய காட்சிகள்
கண்களுக்குள் ஊடுருவி,
நீர் வேண்டாத
தாகம் ஒன்று நிகழ்த்தி அதன்
வறட்சி விரித்து-என்
எண்ணக் கலப்பை கொண்டு
உழுது கொண்டிருக்கிறது!
கோடுகளாய் கீறலிடப் பட்ட
முகமெங்கும் எங்கும்
அமிலம் தெளித்தது போன்று
பார்க்கும் இடமெல்லாம்
பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது!
உருகி விழும்
ஒரு மெழுகின்
வெப்ப துளிகள்
என் நிர்வாண மேனியை
மெல்ல மெல்ல
சிதைப்பது போன்ற
பிம்பம் ஒன்று
நான் பார்த்திருக்கும் விட்டத்தில்
ஓடிக் கொண்டிருக்கிறது
சட்டென கண் மூடுகையில்
வழி நெடுவே
ஓலமிட்டு வந்த
அக் கண்ணீருக்கு சொந்தகாரியின்
அழுகுரல்
என் அறையில் பட்டு
எதிரொலிப்பதை
என் காதுகளால்
தவிர்க்க இயலவில்லை ..,
அவள் தாயாகவோ
தகப்பனுக்கு பிள்ளையாகவோ
கணவனுக்கு மனைவியாகவோ
இருக்க கூடும்....,
முடிந்தால்
என் கனவுகளையும்
சிறை செய்யுங்கள்..,
பெரும்பாலான
பொழுதுகள்
எனது தற்கொலை
கனவில் தான் தொடர்கிறது!
-கவிதை காதலன்
-கவிதை காதலன்
0 comments
Post a Comment