Pin It

Widgets

ஆளுயர
கனவு ஒன்று
வானம் பார்த்தபடி
படுத்திருக்க..,

முகம் தொட்டணைத்து
அழ நினைத்த ஆன்மா ஒன்று
கண்ணாடி கூண்டிருக்கு வெளியே
ஒரு கைதியாய்
சேலை நுனி கடித்து
விம்மி நிற்கிறது!

சுற்றத்தார்
கனவிலிருந்து விழித்திட
ஒரு எச்சரிக்கை..,

மேள தாளங்களும்
பட்டாசு சத்தமும்!

இங்கேயும் சில
புகழ்தலும்,இகழ்தலும்
ஒய்ந்த பாடில்லை!
 

காது கடிக்கும்
கிழவிகள் கூட்டம் ஏனோ
காண கிட்டவில்லை!

விதியில் வீசிப் போகும்
பூக்கள் யாருக்கும்
பிடிப்பதில்லை..,
வாசனை
நுகரப் படுவதில்லை!


அமரர் ஊர்தியில்
நகர்ந்து போகும்
இக்கனவினை போல ..,

இனி வரும் கனவுகளுக்கு
தோள் கொடுக்கவும்
தோள் மாற்றவும்
பாக்கியம்
கிடைப்பதாய் தெரியவில்லை!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets