Pin It

Widgets

இரவின் நெடி

Wednesday, August 10, 2011 | 0 comments »

என் சன்னல் வழி
நிலவினை
பார்த்த படியே
என் தனிமையினை
கிடத்தியிருந்தேன்!

என்றோ ஒரு நாள்
மிச்சம் வைத்திருந்த
வெறுமை ஒன்று-என்
பின்னந்தலை வழியே
மயிர் பிடரி
நனைந்துக் கொண்டிருந்தது!

இருளின் சூட்சமம்
என்னவென்று
ஒரு சூனியக்காரனாய்
மெளன மொழி ஒன்றில்
வசியம் செய்ய முயன்று
தோற்று போக..,

அதன் எச்சத்தின்
வார்த்தைகள்
சில் இரவுகளில்
விழி வழியே
பிடுங்கப் படுவதும் உண்டு!

என் நாசி துளைத்து
உறங்க விடாமல்
செய்து கொண்டிருக்கும்
அத் தனிமையின் நெடியினை...,

எவனோ ஒருவன்
வெளி நின்று
தாளிட்டதாகவும்,

வெளியில் இருந்தொருவன்
உள்ளே தாளிட்டிருப்பதாகவும்
நினைப்பும் ஒன்று உண்டெனக்கு!


                               
                                        -கவிதை காதலன்



0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets