Pin It

Widgets

வழிபாடு

Wednesday, February 29, 2012 | 0 comments »

கண்மூடி கை கூப்பியபடி
மர இருக்கையில் அமர்ந்து
கடவுளை வேண்டிக் கொண்டிருந்தாள்
அந்த பாட்டி

கூட்ட நெரிசல் இல்லை
ஒலிப்பெருக்கி இல்லை
முனுமுனுப்பு இல்லை
நேரக்கணக்கு இல்லை
போதனை இல்லை
காணிக்கை தட்டு இல்லை

பூட்டிய கோயில் முன்னமர்ந்து
பிராத்தனை செய்வதில் தான்
எத்தனை அமைதி
எத்தனை நிம்மதி!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets