Pin It

Widgets

பைத்தியமானவள் ஒருத்தி
வீதியெங்கும் நடந்தபடி
தனக்குள் எதையோ
முனங்கிக் கொண்டு செல்கிறாள்...

அவள் பேசித் திரியும்
வார்த்தை இன்னதென
அங்கே கடந்து போகும்
வாலிபர்களும் வயோதிகர்களும்
கண்டுகொள்வதாய் இல்லை

கீறல்களும் வடுக்களும்
இரத்தக் காயங்களும்
இது என்னவாய் இருக்குமென
சுற்றித் திரியும் யாருக்கும்
அனுமானிக்க இயலவில்லை போலும்...

இவள் பைத்தியக்காரியாகவோ
நல்ல மன நிலையாகவோ
இருக்கையில்
கற்பிழந்திருக்கக் கூடும்
என்று கடந்து செல்கிறாள்

இவளைப் போல் பாதிக்கப்பட்டு
பழக்கப்பட்டுப் போன
பரத்தை ஒருத்தி!

2 comments

  1. K.s.s.Rajh // November 9, 2011 at 6:48 AM  

    அழகான கவிவரிகள்

  2. Unknown // April 21, 2012 at 1:27 PM  

    தங்களது கருத்துக்கு நன்றி

Post a Comment

Blogger Wordpress Gadgets