அவளுக்கான பதிலையும்
எனக்குள் தீர்மானித்து
கேள்விகளைத் தொடுக்கிறேன்...
நான் யூகித்திடாத பதிலை
என் முன் நிறுத்துகிறாள்
என் கோபம் கண்டு
சிரிக்கிறாள்...
அவள் பேசுவதை
ரசிக்கிறேன் என்றாலும்,
என் வார்த்தைகளில்
குற்றம் கானுகிறாள்...
என் கோபங்கள்
வார்த்தைகளாய்
கொப்பளிக்கையில்
கேலி செய்கிறாள்...
இருந்தும் தவறாது
என் காதுகளில்
மையம் கொள்கிறாள்...
இவையெல்லாம்
அவளுக்கு எடுத்துரைக்க
மெளனம் பேசுகிறாள்...
அங்கே இருவரின்
ஆறுதலும் காலத்தின்
கையில் திணிக்கப்பட
அவள்
அவளாகத் தான் இருக்கிறாள்
நான் எதிர் பார்ப்பவள்
எவளாகவோ இருக்கிறாள்!
எனக்குள் தீர்மானித்து
கேள்விகளைத் தொடுக்கிறேன்...
நான் யூகித்திடாத பதிலை
என் முன் நிறுத்துகிறாள்
என் கோபம் கண்டு
சிரிக்கிறாள்...
அவள் பேசுவதை
ரசிக்கிறேன் என்றாலும்,
என் வார்த்தைகளில்
குற்றம் கானுகிறாள்...
என் கோபங்கள்
வார்த்தைகளாய்
கொப்பளிக்கையில்
கேலி செய்கிறாள்...
இருந்தும் தவறாது
என் காதுகளில்
மையம் கொள்கிறாள்...
இவையெல்லாம்
அவளுக்கு எடுத்துரைக்க
மெளனம் பேசுகிறாள்...
அங்கே இருவரின்
ஆறுதலும் காலத்தின்
கையில் திணிக்கப்பட
அவள்
அவளாகத் தான் இருக்கிறாள்
நான் எதிர் பார்ப்பவள்
எவளாகவோ இருக்கிறாள்!
0 comments
Post a Comment