யாதென
கணிக்க முடியாதொரிடத்தில்
பருவ மங்கை ஒருத்தி
வானம் பார்த்த படி
படுத்திருந்தாள்....
அவளின் ஆடைகள் கூட
வானம் சூழ்ந்த மேகம் போல
வெண்ணிறம் பூண்டிருந்தது...
அங்கே கூடியிருந்த
பொது சனங்கள் யாவரும்
கூடி நின்று
வேடிக்கை பார்க்கிறார்களே தவிர,
உதவுவது போன்று
எந்த பிம்ப அலையும்
நிகழ்வதாய் தெரியவில்லை
என் கண்களுக்கு!
ஒருவருக்கொருவர்
பேசிக் கொள்கிறார்கள்-அவள்
இறப்பிற்கான காரணம்
இவர்களே தீர்மானிக்கின்றார்கள்...
எவருக்கும் பயமற்றவனாய்
யாருடைய உதவியும் கேளாமல்
நான் மட்டும் உதவ முற்படுகிறேன்
ஒருவேளை இது
கனவாய் இல்லாதிருந்தால்
அந்தக் கூட்டத்தில் நானும்
ஒருவனாய் நின்றிருக்க கூடும்!
கணிக்க முடியாதொரிடத்தில்
பருவ மங்கை ஒருத்தி
வானம் பார்த்த படி
படுத்திருந்தாள்....
அவளின் ஆடைகள் கூட
வானம் சூழ்ந்த மேகம் போல
வெண்ணிறம் பூண்டிருந்தது...
அங்கே கூடியிருந்த
பொது சனங்கள் யாவரும்
கூடி நின்று
வேடிக்கை பார்க்கிறார்களே தவிர,
உதவுவது போன்று
எந்த பிம்ப அலையும்
நிகழ்வதாய் தெரியவில்லை
என் கண்களுக்கு!
ஒருவருக்கொருவர்
பேசிக் கொள்கிறார்கள்-அவள்
இறப்பிற்கான காரணம்
இவர்களே தீர்மானிக்கின்றார்கள்...
எவருக்கும் பயமற்றவனாய்
யாருடைய உதவியும் கேளாமல்
நான் மட்டும் உதவ முற்படுகிறேன்
ஒருவேளை இது
கனவாய் இல்லாதிருந்தால்
அந்தக் கூட்டத்தில் நானும்
ஒருவனாய் நின்றிருக்க கூடும்!
0 comments
Post a Comment