Pin It

Widgets

தனித்துயர்

Saturday, September 14, 2013 | 0 comments »

இருபக்க கதவு கொண்ட
வீட்டினை பூட்டிவிட்டு
வெளியேறுகையில்
ஒருமுறை இழுத்துப்பார்த்து

முன்னமே புகைத்து அணைத்த
சுருட்டினை பற்றவைத்தபடி
வேப்பமர நிழலில்
பேசித்திரும்பும் தாத்தாவுக்கு

சந்தைக்குப் போன பாட்டி
திரும்பி வந்தால்
எட்டத்திலிருக்கும் சாவி
எட்டுமாவென கேட்ட
பேத்தி நினைவில் வந்தாள்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets