Pin It

Widgets

கா-தல்

Saturday, September 14, 2013 | 0 comments »

பிரியமோ துயரமோ
கள்ளிச்செடியினூடே படரும்
கொடியினை ஒத்திருக்கிறது

கொடி யாரது
கள்ளிச்செடி யாரெதுவென
வினவும் நடுநிசியில்

தற்செயலாய் பிய்ந்த
தசையின் குருதியில் பெயரெழுதி
புகைப்படம் அனுப்புகிறாய்

கவனிக்க மறந்த ரோஜாவை
வாசல் தேடிப்போகிறேன்
முட்கள் அழகாய் பூத்திருக்கிறது

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets