உன் நேற்றைய நடுநிசி விசும்பலில்
தீராது ஊறிக்கிடக்கும்
மாளாக்காதலை ஊட்டிக்கொண்டிருந்தாய்
பேரன்பின் போக்கு அறிந்தும்
உன்னை தேற்றுவதான முனைப்பில்
வார்த்தைகள் தோற்றுக்கொண்டிருந்தது
சதைப்பசியறியா உன் மழலை
பதற்ற மொழியில் காதுகளிரண்டும்
என் சுற்றத்தை மறந்திருந்தது
ஆறுதல் படுத்துவதன் அபத்தமறிந்து
விழி வழிய பின் தொடருகிறேன்
முத்தங்கள் உவர்க்கட்டும் காற்றில்...
தீராது ஊறிக்கிடக்கும்
மாளாக்காதலை ஊட்டிக்கொண்டிருந்தாய்
பேரன்பின் போக்கு அறிந்தும்
உன்னை தேற்றுவதான முனைப்பில்
வார்த்தைகள் தோற்றுக்கொண்டிருந்தது
சதைப்பசியறியா உன் மழலை
பதற்ற மொழியில் காதுகளிரண்டும்
என் சுற்றத்தை மறந்திருந்தது
ஆறுதல் படுத்துவதன் அபத்தமறிந்து
விழி வழிய பின் தொடருகிறேன்
முத்தங்கள் உவர்க்கட்டும் காற்றில்...
0 comments
Post a Comment