Pin It

Widgets

உன் நேற்றைய நடுநிசி விசும்பலில்
தீராது ஊறிக்கிடக்கும்
மாளாக்காதலை ஊட்டிக்கொண்டிருந்தாய்

பேரன்பின் போக்கு அறிந்தும்
உன்னை தேற்றுவதான முனைப்பில்
வார்த்தைகள் தோற்றுக்கொண்டிருந்தது

சதைப்பசியறியா உன் மழலை
பதற்ற மொழியில் காதுகளிரண்டும்
என் சுற்றத்தை மறந்திருந்தது

ஆறுதல் படுத்துவதன் அபத்தமறிந்து
விழி வழிய பின் தொடருகிறேன்
முத்தங்கள் உவர்க்கட்டும் காற்றில்...

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets