Pin It

Widgets

சிறுவர்களின் கூச்சல்கள் நிறைந்த
அந்தத்தெருவில்
புழுதிகள் தீர்மானித்துக்கொண்டிருந்தத

ஒவ்வொருவருக்குமான
கொண்டாட்டத்தையும்
மன,உடல் வலிமையையும்

விரல் அச்சுகள் பதிந்த
சட்டையின் பதைபதைப்பு
ஒரு இரவில் தொலைந்து போக,

எல்லா மாலை வேளையும்
விடுமுறை பொழுதுகளிலும்
மண் தரைகள் தேடித்திரிகின்றன

கான்கிரீட் மூடிய
அச்சிறுவர்களின் சந்தோசத்தையும்
பாதத்தடங்களையும்..

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets