Pin It

Widgets

யாருமற்ற அந்தப் பூங்காவில்
நிலவின் ஒளியில்
மிளிர்ந்து கொண்டிருந்தது
பழுத்த இலைகள்

காற்றில் சலசலத்தபடி
அதன் தனிமைக்கு
இசை மீட்டுக் கொண்டிருந்தது
உதிர்ந்த இலைகள்

சொட்டு நீர் பாசனத்தால்
மரங்களின் தண்டினில்
கசிந்து கொண்டிருந்தது
நீர்த் துளிகள்

மூடிய கிணற்றில்
கம்பிகளின் வழியே நழுவிய
இலைகளை தாங்கிக் கொண்டிருந்தது
சிலந்தி வலைகள்

யாருக்கும் தெரியாமல்
பூங்காவின் அழகினை
வர்ணித்துக் கொண்டிருந்தது
சில நரைத்த முடிகள்!


0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets