யாருமற்ற அந்தப் பூங்காவில்
நிலவின் ஒளியில்
மிளிர்ந்து கொண்டிருந்தது
பழுத்த இலைகள்
காற்றில் சலசலத்தபடி
அதன் தனிமைக்கு
இசை மீட்டுக் கொண்டிருந்தது
உதிர்ந்த இலைகள்
சொட்டு நீர் பாசனத்தால்
மரங்களின் தண்டினில்
கசிந்து கொண்டிருந்தது
நீர்த் துளிகள்
மூடிய கிணற்றில்
கம்பிகளின் வழியே நழுவிய
இலைகளை தாங்கிக் கொண்டிருந்தது
சிலந்தி வலைகள்
யாருக்கும் தெரியாமல்
பூங்காவின் அழகினை
வர்ணித்துக் கொண்டிருந்தது
சில நரைத்த முடிகள்!
நிலவின் ஒளியில்
மிளிர்ந்து கொண்டிருந்தது
பழுத்த இலைகள்
காற்றில் சலசலத்தபடி
அதன் தனிமைக்கு
இசை மீட்டுக் கொண்டிருந்தது
உதிர்ந்த இலைகள்
சொட்டு நீர் பாசனத்தால்
மரங்களின் தண்டினில்
கசிந்து கொண்டிருந்தது
நீர்த் துளிகள்
மூடிய கிணற்றில்
கம்பிகளின் வழியே நழுவிய
இலைகளை தாங்கிக் கொண்டிருந்தது
சிலந்தி வலைகள்
யாருக்கும் தெரியாமல்
பூங்காவின் அழகினை
வர்ணித்துக் கொண்டிருந்தது
சில நரைத்த முடிகள்!
0 comments
Post a Comment