Pin It

Widgets

தேரைகள் நிறைந்த
அடர் வனத்தில்

ஒரு
தவளையின் கனத்த சத்தம்
உன்னை சூழ்ந்திருக்கிறது

உன்னை
காயப்படுத்தியதாய் சொல்கிறாய்

காய் நகர்த்தியது
மனதறிய எனக்குத் தெரியாது

என் முகம் உனக்கு
அருவருப்பாய் முன்னிருத்தப்பட்டிருக்கிறத

மண்டியிட்டு
என்னை நியாயப்படுத்தவுமில்லை

குற்றம்
குற்றமாகவே இருக்கட்டும்

நானும்
அப்படித்தான் சித்தரிக்கப்பட்டிருக்கிறேன

ஆம்
நானும் அப்படித்தான் நடந்து கொண்டேன்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets