யாருமில்லா அறையில்
இதயத்தின் இறைச்சல்கள் நிறைந்திருக்க
வெளியுலகமெல்லாம் ஊமைபேச்சு
பிடரி மயிர் நனைய
வியர்க்கும் இவ்விரவில்
மரமறுக்கும் வாளினை நக்கத்துடிக்கும்
மனதின் பேராவலை
இருளில் தடவித் தடவி எடுத்த
பேனாவின் துணையோடு
அறையெங்கும் காகிதம் நிறைத்தும் தீராது
இறுகப் பற்றிய உச்சிக்கூந்தலை
நர நரவென அறுத்தெறிய,
வழியும் இரத்த வாடையோடு
தொப்புள் கொடியின் ஆயுள் கேட்க
தாயின் ஆன்மா தேடி
வீதியலைகிறான் ஒருவன்!
இதயத்தின் இறைச்சல்கள் நிறைந்திருக்க
வெளியுலகமெல்லாம் ஊமைபேச்சு
பிடரி மயிர் நனைய
வியர்க்கும் இவ்விரவில்
மரமறுக்கும் வாளினை நக்கத்துடிக்கும்
மனதின் பேராவலை
இருளில் தடவித் தடவி எடுத்த
பேனாவின் துணையோடு
அறையெங்கும் காகிதம் நிறைத்தும் தீராது
இறுகப் பற்றிய உச்சிக்கூந்தலை
நர நரவென அறுத்தெறிய,
வழியும் இரத்த வாடையோடு
தொப்புள் கொடியின் ஆயுள் கேட்க
தாயின் ஆன்மா தேடி
வீதியலைகிறான் ஒருவன்!
0 comments
Post a Comment