Pin It

Widgets

யாருமில்லா அறையில்
இதயத்தின் இறைச்சல்கள் நிறைந்திருக்க
வெளியுலகமெல்லாம் ஊமைபேச்சு

பிடரி மயிர் நனைய
வியர்க்கும் இவ்விரவில்
மரமறுக்கும் வாளினை நக்கத்துடிக்கும்
மனதின் பேராவலை

இருளில் தடவித் தடவி எடுத்த
பேனாவின் துணையோடு
அறையெங்கும் காகிதம் நிறைத்தும் தீராது

இறுகப் பற்றிய உச்சிக்கூந்தலை
நர நரவென அறுத்தெறிய,
வழியும் இரத்த வாடையோடு

தொப்புள் கொடியின் ஆயுள் கேட்க
தாயின் ஆன்மா தேடி
வீதியலைகிறான் ஒருவன்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets