Pin It

Widgets

வீதியெங்கும் சிதறிக் கிடக்கும்
உன் நினைவின் வெப்பத் தணலில்
இதயம் கொண்டு நடை பழகுகிறேன்


அதன் மாமிச வாசனையில்
எனை சூழ்ந்த கனவுக் காட்சிகள்
கொஞ்சம் கொஞ்சமாய்
செந்நாய் போல பிய்த்து தின்னுகிறது

நினைவுகளின் கூரிய பற்களிலிருந்து
நழுவிய மாமிசத்தின் துடிப்பினை
கண்ணீர் ஒழுக தப்பித்து

கருக்கலைந்த ஒரு தாயின்
அழுகை சத்தம் போல
மனமெங்கும் கனத்தபடி
திசை தெரியாது பயணிக்கிறேன்

மரணத்தின் வாசற்படியில்
கால் நீட்டி அமர்ந்திருக்கிறாள்
ஒற்றைக் கால் காதலி!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets