கண்ணில் நின்றாடும்
பிம்பமொன்று
கதவருகே நிழலாடுது
வாசலின் குறுக்கே நீளும்
நரம்பு கயிற்றில்
என் ஆடை மட்டும் தனியாடுது
எதிர் கட்டிலின்று
ஏதுமில்லாது போனது கண்டு
கண்ணில் நீராடுது
எதையோ பேசிட திறக்கும் இதழ்கள்
எவருமில்லையென அறிந்து
அதுவாய் தள்ளாடுது
ராஜா மீட்டும்
நீண்ட வயலின் கேளாது
காதுகளிரண்டும் செவிடானது
மீண்டும் துணைக்கு வரும்
தனிமை கண்டு
அறையே இருளானது
இனி
நானே அறையின் கதவை
தாழிட வேண்டும்
நானே அறையின் கதவை
திறந்திட வேண்டும்
பிம்பமொன்று
கதவருகே நிழலாடுது
வாசலின் குறுக்கே நீளும்
நரம்பு கயிற்றில்
என் ஆடை மட்டும் தனியாடுது
எதிர் கட்டிலின்று
ஏதுமில்லாது போனது கண்டு
கண்ணில் நீராடுது
எதையோ பேசிட திறக்கும் இதழ்கள்
எவருமில்லையென அறிந்து
அதுவாய் தள்ளாடுது
ராஜா மீட்டும்
நீண்ட வயலின் கேளாது
காதுகளிரண்டும் செவிடானது
மீண்டும் துணைக்கு வரும்
தனிமை கண்டு
அறையே இருளானது
இனி
நானே அறையின் கதவை
தாழிட வேண்டும்
நானே அறையின் கதவை
திறந்திட வேண்டும்
0 comments
Post a Comment