Pin It

Widgets

கண்ணில் நின்றாடும்
பிம்பமொன்று
கதவருகே நிழலாடுது

வாசலின் குறுக்கே நீளும்
நரம்பு கயிற்றில்
என் ஆடை மட்டும் தனியாடுது

எதிர் கட்டிலின்று
ஏதுமில்லாது போனது கண்டு
கண்ணில் நீராடுது

எதையோ பேசிட திறக்கும் இதழ்கள்
எவருமில்லையென அறிந்து
அதுவாய் தள்ளாடுது

ராஜா மீட்டும்
நீண்ட வயலின் கேளாது
காதுகளிரண்டும் செவிடானது

மீண்டும் துணைக்கு வரும்
தனிமை கண்டு
அறையே இருளானது

இனி
நானே அறையின் கதவை
தாழிட வேண்டும்
நானே அறையின் கதவை
திறந்திட வேண்டும்

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets