Pin It

Widgets

பேரழகி

Friday, June 15, 2012 | 0 comments »

இப்படித்தானென பிரித்திடாது
விரல் கோதி விட்ட
உச்சந்தலை வகிடு

துண்டித்த வானவில்லென
அதனில்லாத நிறத்தில்
ஒரு வில் புருவம்

சரிந்து விழுந்த
முன்னெற்றி கூந்தலின் ஊடே
ஒளிரும் விழி

குத்திட முனையும்
மூக்கில்
சின்னதாய் மூக்குத்தி

இதழோரம்
கசிந்து விழும்
மெல்லிய புன்னகை

வர்ணம் தீட்டாத
எதார்த்தம் மிஞ்சிய
உதட்டழகு

மலையென ஏறியிறங்கும்
அம்சமாய்
இரட்டை நாடி

மொத்தத்தில்
என் சப்த நாடியும்
விழி கூட்டுக்குள் அடைத்த
இயற்கை சீற்றமடி நீ!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets