Pin It

Widgets

உடைமரக் காடுகளின் வழியே
ஓலமிட்டு ஓடும்
ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் குரல்
ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்க

திண்ணையிலமர்ந்த படி
வெடித்த சிரிப்புச் சத்ததுடன்
மதுவில் குருதி கலந்து ஒருவன்
தரையிலூற்றி நக்கிக் கொண்டிருந்தான்

ஊரடங்கிக் கிடக்கும்
அத்தெருவில் பெட்டை நாயினை
சில ஆண் நாய்கள்
பின் தொடர்ந்து கொண்டிருக்க

ஓடுகள் சரிந்த பாழடைந்த வீட்டிலிருந்து
பரத்தையொருத்தி
ஆணுறையை வீதியெறிந்து செல்கிறாள்

தெருவிளக்கின் நிழலில்
நின்றிருந்த சிறுமியானவள்
எழுந்து போனவனின் முகம் பார்க்க

ஒரு அலறல் சத்தத்தோடு எழவும்
மிச்சமிருந்த ஒரு குவளை நீரும்
கைப்பட்டு தரை சேர்ந்திருந்தது

இடம் பெயர்ந்த முதுகின்
வியர்வை அச்சுகளும்
தலை நனைத்த வியர்வைகளும்
பயம் கூட்ட

விறுவிறுவென எழுந்தவன்
விந்தனுக்களை வெளியேற்றி
மீண்டும் உறங்கிப்போகிறான்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets