Pin It

Widgets

டைரி

Friday, December 14, 2012 | 0 comments »

நூல் நுழைய முடியாதவாரு
துருவேறியிருந்த ஊசியின் துளை வழியே
கடந்த காலத்தை காதலித்துக்கொண்டிருந்தாள்

பழுப்பேறி முனைமடங்கி பனிக்காலத்து

ஈரம் பாய்ந்து புத்தகத்திற்கான வாசமும்
வியர்வை வாடையும் வீசிக்கொண்டிருந்தது டைரி

நடுக்கங்கள் தீராதிருந்தாலும்
பொடிய மூடிய கண்கள் அகல விரித்து
விரல் வருடியபடி வாசித்துக்கொண்டிருந்தாள்

கையின் அழுத்தம் பதிந்து
வியர்வையின் நிறம் ஏறியிருந்த
ஒரு பக்கத்தில் ஊசியின் கதையெழுதியிருந்தது

ஒரு சொட்டு கண்ணீரும்
தாளமுடியாத துக்கமும் வெட்கமும் சூழ
உடைந்த குரலில் வாசிக்கத்துவங்கினாள்

திட்டுக்களோடும் சிணுங்கல்களோடும்
தானேயறுத்த ரவிக்கையின்
ஊக்குகளை வைத்துக்கொடுத்த நாள் இதுவென்று!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets