Pin It

Widgets


கோடையில் கூடிப்பிரிந்த வேளையில்
வெயில்படர முதுகு காட்டி காதலி
தனக்குள்ளே விசும்பிக்கொண்டிருந்தாள்

உலர்ந்து கொண்டிருக்கும் வியர்வை மிஞ்சிய
தண்டுவடத்தில் சிலிர்த்திட்டிருந்தது
பூனைமுடிகளும் பூத்திருந்த துளிகளும்

அஸ்திவார மண்குவியல்களில்
புரண்டு ஒட்டிய மணல்போக இடது தோளில்
கவியொன்று எழுதியிருந்தான் காதலன்

அழித்திட மனமில்லையென்றும்
வீட்டிற்கு செல்ல வழியில்லையென்றும்
செல்லக் கோபமுமாய் முனகலுமாயிருந்தாள்

தன் உடலெங்கும் வியாபித்துக்கிடக்கும்
உன் முத்த வடுக்களை
என்ன செய்வதாய் உத்தேசம் என கேட்க

மார்பிடையில் கவியெழுதி வாங்கி
முத்தத்தின் எச்சில் தொட்டு
அழித்துக்கொண்டிருந்தாள் முந்தைய கவிதையை!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets