கோடையில் கூடிப்பிரிந்த வேளையில்
வெயில்படர முதுகு காட்டி காதலி
தனக்குள்ளே விசும்பிக்கொண்டிருந்தாள்
உலர்ந்து கொண்டிருக்கும் வியர்வை மிஞ்சிய
வெயில்படர முதுகு காட்டி காதலி
தனக்குள்ளே விசும்பிக்கொண்டிருந்தாள்
உலர்ந்து கொண்டிருக்கும் வியர்வை மிஞ்சிய
தண்டுவடத்தில் சிலிர்த்திட்டிருந்தது
பூனைமுடிகளும் பூத்திருந்த துளிகளும்
அஸ்திவார மண்குவியல்களில்
புரண்டு ஒட்டிய மணல்போக இடது தோளில்
கவியொன்று எழுதியிருந்தான் காதலன்
அழித்திட மனமில்லையென்றும்
வீட்டிற்கு செல்ல வழியில்லையென்றும்
செல்லக் கோபமுமாய் முனகலுமாயிருந்தாள்
தன் உடலெங்கும் வியாபித்துக்கிடக்கும்
உன் முத்த வடுக்களை
என்ன செய்வதாய் உத்தேசம் என கேட்க
மார்பிடையில் கவியெழுதி வாங்கி
முத்தத்தின் எச்சில் தொட்டு
அழித்துக்கொண்டிருந்தாள் முந்தைய கவிதையை!
பூனைமுடிகளும் பூத்திருந்த துளிகளும்
அஸ்திவார மண்குவியல்களில்
புரண்டு ஒட்டிய மணல்போக இடது தோளில்
கவியொன்று எழுதியிருந்தான் காதலன்
அழித்திட மனமில்லையென்றும்
வீட்டிற்கு செல்ல வழியில்லையென்றும்
செல்லக் கோபமுமாய் முனகலுமாயிருந்தாள்
தன் உடலெங்கும் வியாபித்துக்கிடக்கும்
உன் முத்த வடுக்களை
என்ன செய்வதாய் உத்தேசம் என கேட்க
மார்பிடையில் கவியெழுதி வாங்கி
முத்தத்தின் எச்சில் தொட்டு
அழித்துக்கொண்டிருந்தாள் முந்தைய கவிதையை!
0 comments
Post a Comment