அகாலமாய் சொல்லொன்றை உமிழ்ந்து
பரிகாசத்தால் கட்டத்துவங்கியிருக்கிறாய்
உனக்கும் எனக்குமான விரிசல் பாலத்தை
உணர்வுக்குஞ்சுகளை சுமக்கும் இதயக்கூட்டில்
பரிகாசத்தால் கட்டத்துவங்கியிருக்கிறாய்
உனக்கும் எனக்குமான விரிசல் பாலத்தை
உணர்வுக்குஞ்சுகளை சுமக்கும் இதயக்கூட்டில்
தாய்ப்பறவையில்லையென அறிந்து வார்தையெனும்
நெல்மணிகளை உணவெனத் தூவுகிறாய்
சொற்கள் சிக்குண்டு உயிரான
உயிரே உயிர் பிரியுமென தெரிந்தும்
உயிர் வைத்த உயிரே உயிர் பிரிக்கிறாய்
கூடிக்கிடக்கும் கோயில் புறாக்களை
ஆலயமணியோசை கலைப்பது போல
நீயும் நானுமாயிருக்க நீயே கலை(க்)கிறாய்
வார்த்தைகளில் உடைபடும் ஆன்மாவின்
ஓசை விரும்பும் உன் மென் காதுகளுக்கு
இனியும் தீனி போட திராணியில்லை...
ஆதலால் விடைபெறுகிறேன்!
நெல்மணிகளை உணவெனத் தூவுகிறாய்
சொற்கள் சிக்குண்டு உயிரான
உயிரே உயிர் பிரியுமென தெரிந்தும்
உயிர் வைத்த உயிரே உயிர் பிரிக்கிறாய்
கூடிக்கிடக்கும் கோயில் புறாக்களை
ஆலயமணியோசை கலைப்பது போல
நீயும் நானுமாயிருக்க நீயே கலை(க்)கிறாய்
வார்த்தைகளில் உடைபடும் ஆன்மாவின்
ஓசை விரும்பும் உன் மென் காதுகளுக்கு
இனியும் தீனி போட திராணியில்லை...
ஆதலால் விடைபெறுகிறேன்!
0 comments
Post a Comment