Pin It

Widgets


அகாலமாய் சொல்லொன்றை உமிழ்ந்து
பரிகாசத்தால் கட்டத்துவங்கியிருக்கிறாய்
உனக்கும் எனக்குமான விரிசல் பாலத்தை

உணர்வுக்குஞ்சுகளை சுமக்கும் இதயக்கூட்டில்
தாய்ப்பறவையில்லையென அறிந்து வார்தையெனும்
நெல்மணிகளை உணவெனத் தூவுகிறாய்

சொற்கள் சிக்குண்டு உயிரான
உயிரே உயிர் பிரியுமென தெரிந்தும்
உயிர் வைத்த உயிரே உயிர் பிரிக்கிறாய்

கூடிக்கிடக்கும் கோயில் புறாக்களை
ஆலயமணியோசை கலைப்பது போல
நீயும் நானுமாயிருக்க நீயே கலை(க்)கிறாய்

வார்த்தைகளில் உடைபடும் ஆன்மாவின்
ஓசை விரும்பும் உன் மென் காதுகளுக்கு
இனியும் தீனி போட திராணியில்லை...

ஆதலால் விடைபெறுகிறேன்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets