Pin It

Widgets


இருவருக்குமான விவாதங்களுக்குப்பின்
விலகுதல் பற்றி பேசத்துவங்கினாய்
வரி வரியாய் வழியும் வலியாய்

உடலின் பசி மறைத்து
பேச்சினில் மூழ்கிடும் வேளையில்
ஒரு முத்தத்திற்கு அடிபோடுவதையும்

யாருமில்லையென உணரும் பொழுதில்
மிரளும் கண்களுக்கும் திமிறும் கைகளுக்கும்
தற்செயலாய் சண்டையிட்டு நிறுத்தி வைப்பதையும்

நீண்ட பயணத்தில் தயக்கத்துடன்
முதல் நாள் தோள் சாய்ந்ததையும்
நினைவுகூற, சட்டென முகம் சுழித்தாய்

பிரிதல் பற்றிய உன் புரிதல்களை
நானும் புரிந்து கொள்ள வேண்டுமென
என் குரலுக்கு செவி சாய்க்காது பேசினாய்

உன் அருகாமையின் வேண்டுதலை வேண்டிட
நிராகரிப்பின் நியாயம் பேசி
விடைபெறுதலின் நிமித்தமாய் முத்தமிட்டாய்

உன் எச்சில் தின்ற என் நெற்றி பரப்பினை
கண்ணாடியில் காணுகையில் உயிரறுக்கிறது
இதற்கும் நீயே முடிவொன்றை சொல்லிச்செல்?

மணமகளை அழைத்துவரச்சொல்லிக்கொண்டிருக்கின்றனர்

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets